ஒரு மனிதனின் சுதந்திரம் எப்படி உணரப்படவேண்டும்?
"தனது அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றது என்று வேறொருவன் அவனுக்காகக் குரல் கொடுக்கும்படி வைக்காமல் இருப்பதில் உணரப்படவேண்டும்"
எமது சமூகத்தில் ஒரு மனிதனின் சுதந்திரம் எப்படி உணரப்படுகிறது?
"வேறோருவனது சுதந்திரம் பறிபோகிறது என்று "அவன் எனக்கு வேண்டப்படுபவனாகில்" குரல்கொடுப்பதில் உணரப்படுகிறது"
என்னைப்பொறுத்தவரை இந்த உண்மையை உணர்த்துவதுதான் "இறைவி".
கார்த்திக் சுப்புராஜ் இப்படி ஒரு படம் எடுத்து இயக்குனர்கள் வரிசையில் உயர்ந்து தெரிகிறார்! மணிரத்னமும் பாலச்சந்தரும் ஏனோ தொலைவாகிப்போன நெருடல் படம் பார்த்து முடிந்ததும்.
இவ்வளவு கால ஆண் மையப்படுத்தப்பட்ட/எப்படியோ ஆணையே உயர்த்திக்காட்டி எடுக்கப்பட்ட படங்கள் எல்லாம் நிதர்சனத்தின் முன்னால் தவிடுபொடி ஆகிவிடுகின்றன.
இறைவியின் தனித்துவமே சமத்துவம் பேசுதல்தான். என்ன, பேசுவது பெண் அல்ல, திரைக்கதை. பேச வைப்பவர்கள் ஆண்கள் என்பதில் வித்தியாசம் தெரிகிறது.
ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம் என்று பாரதி சொன்னது இதைதான். என்று ஆண்கள் நாம் ஆண் என்கிற அகங்காரத்தை விடுகிறோமோ அன்று ஆரம்பமாகும் சமத்துவம். என்று பெண்கள் நம்மால் ஆண்கள் இன்றி தனித்து வாழ முடியும் என்கிற முடிபை பெண்ணுரிமை பேசவேண்டும் என்பதற்காக மட்டும் இன்றி இயல்பாக எடுக்கிறார்களோ அன்று முடியும் இவ்விதி.
எஸ் ஜே சூர்யா, சேதுபதி, பொபி சிம்ஹா : வெவ்வேறு கோணங்களில் வாழும் சராசரி ஆண்கள். இங்கு சராசரி என்னும் பதம் என்னைப்போல ஒவ்வொரு ஆணையும் குறிக்கும். எதோ ஒரு வகையில் நாம் பெண்களை குறைத்து மதிப்பிடுவது உண்மை. அதேபோல அஞ்சலி, கமலினி, வடிவுக்கரசி மூவரும் சராசரி பெண்களை நினைவுபடுத்துகிறார்கள். சேதுபதியின் காதலியாய் வரும் கதாபாத்திரம்தான்: ஆண்கள் உதாசினப்படுத்தும், சமத்துவத்துடன் வாழும் பெண்ணை உருவகிக்கும் பெண்.
இயல்பு வாழ்க்கையைப் படம் எடுக்கும்போது நமது இயக்குனர்கள் எப்போதுமே யதார்த்தத்தினை கொலை செய்து கைதட்டல்களை மட்டும் எதிர்பார்த்து எடுப்பார்கள். அதனை உடைத்ததற்கே கார்த்திக்கு ஒரு சபாஷ்!
சந்தோஷின் இசை படத்திற்குப் பக்கபலம்.
ஆக மொத்தம் மசாலா இல்லாத உள்ளதை உள்ளபடி சொல்லும் உண்மையான படம்.
"உண்மைகள் கசப்பானவை!"
~Shanan
"தனது அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றது என்று வேறொருவன் அவனுக்காகக் குரல் கொடுக்கும்படி வைக்காமல் இருப்பதில் உணரப்படவேண்டும்"
எமது சமூகத்தில் ஒரு மனிதனின் சுதந்திரம் எப்படி உணரப்படுகிறது?
"வேறோருவனது சுதந்திரம் பறிபோகிறது என்று "அவன் எனக்கு வேண்டப்படுபவனாகில்" குரல்கொடுப்பதில் உணரப்படுகிறது"
என்னைப்பொறுத்தவரை இந்த உண்மையை உணர்த்துவதுதான் "இறைவி".
இவ்வளவு கால ஆண் மையப்படுத்தப்பட்ட/எப்படியோ ஆணையே உயர்த்திக்காட்டி எடுக்கப்பட்ட படங்கள் எல்லாம் நிதர்சனத்தின் முன்னால் தவிடுபொடி ஆகிவிடுகின்றன.
இறைவியின் தனித்துவமே சமத்துவம் பேசுதல்தான். என்ன, பேசுவது பெண் அல்ல, திரைக்கதை. பேச வைப்பவர்கள் ஆண்கள் என்பதில் வித்தியாசம் தெரிகிறது.
ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம் என்று பாரதி சொன்னது இதைதான். என்று ஆண்கள் நாம் ஆண் என்கிற அகங்காரத்தை விடுகிறோமோ அன்று ஆரம்பமாகும் சமத்துவம். என்று பெண்கள் நம்மால் ஆண்கள் இன்றி தனித்து வாழ முடியும் என்கிற முடிபை பெண்ணுரிமை பேசவேண்டும் என்பதற்காக மட்டும் இன்றி இயல்பாக எடுக்கிறார்களோ அன்று முடியும் இவ்விதி.
எஸ் ஜே சூர்யா, சேதுபதி, பொபி சிம்ஹா : வெவ்வேறு கோணங்களில் வாழும் சராசரி ஆண்கள். இங்கு சராசரி என்னும் பதம் என்னைப்போல ஒவ்வொரு ஆணையும் குறிக்கும். எதோ ஒரு வகையில் நாம் பெண்களை குறைத்து மதிப்பிடுவது உண்மை. அதேபோல அஞ்சலி, கமலினி, வடிவுக்கரசி மூவரும் சராசரி பெண்களை நினைவுபடுத்துகிறார்கள். சேதுபதியின் காதலியாய் வரும் கதாபாத்திரம்தான்: ஆண்கள் உதாசினப்படுத்தும், சமத்துவத்துடன் வாழும் பெண்ணை உருவகிக்கும் பெண்.
இயல்பு வாழ்க்கையைப் படம் எடுக்கும்போது நமது இயக்குனர்கள் எப்போதுமே யதார்த்தத்தினை கொலை செய்து கைதட்டல்களை மட்டும் எதிர்பார்த்து எடுப்பார்கள். அதனை உடைத்ததற்கே கார்த்திக்கு ஒரு சபாஷ்!
சந்தோஷின் இசை படத்திற்குப் பக்கபலம்.
ஆக மொத்தம் மசாலா இல்லாத உள்ளதை உள்ளபடி சொல்லும் உண்மையான படம்.
"உண்மைகள் கசப்பானவை!"
~Shanan
No comments:
Post a Comment